சிவகார்த்திகேயன் "என் சந்தோஷ கண்ணீரே" என்று மனைவியிடம் திருமண நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
நடிகர் சிவகார்த்திகேயன் ஆர்த்தி என்பவரை கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 27ஆம் தேதி திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்.
இவர்களுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி அவர்கள் 13-வது திருமண நாளை சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிகள் கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள சிவகார்த்திகேயன், ‘என் சந்தோஷ கண்ணீரே.. என்று பதிவு செய்து மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தின் பின்னணியில் அவரது அப்பா புகைப்படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர் தற்போது நடித்த முடித்து திரைக்கு வந்த மாவீரன் படம் பெரும் வெற்றியை ஈட்டித் தந்தது .மேலும் எஸ் கே 22வின் படம் பெரிய சாமியால் இயக்கப்பட்டு வருகிறது மேலும் இது காஷ்மீரில் எடுக்கப்பட்டு வருகிறது.