நயன்தாரா தனது குழந்தைகளுடன் முதல் ஓணம் பண்டிகையை கொண்டாடிய க்யூட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!!
இயக்குனர் மற்றும் நடிகர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் நயன்தாரா மற்றும் தனது குழந்தைகளுடன் ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
தனது குழந்தைகள் உயிர் மற்றும் உலகத்துடன் முதல் ஓணம் பண்டிகையை கொண்டாடுவதில் மிகவும் மகிழ்ச்சி என்றும் அனைவருக்கும் அட்வான்ஸ் ஓணம் பண்டிகை வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் அதில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த புகைப்படங்களை மட்டுமல்லாமல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படங்களையும் பதிவு செய்து விக்னேஷ் சிவன் அதில் எங்கள் மிக எளிமையான அழகான வாழ்க்கை தொடர்கிறது மேலும் தனது குழந்தைகளுடன் சிறப்பாக ஓணம் கொண்டாடி இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் அனைவருக்கும் ஓணம் பண்டிகைக்கான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.