நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த நடிகைக்கு இந்த நிலைமையா.. அட கடவுளே...! இந்த கொடுமையை என்னன்னு தான் சொல்றது!


actress karpagam latest stills

நடிகர் சூர்யா நடித்த பேரழகன் திரைப்படத்தில், பூனம் கேரக்டருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை கற்பகம்.

இவர் இயற்கையிலேயே குள்ளமாக இருப்பதால்.. இந்த படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்த பொழுதும், கொரோனா காலகட்டத்தில் வறுமையில் மிகவும் நொடித்து போயிருந்தார்.

அதன் பிறகு ஒரு வழியாக, தனக்கு தெரிந்த தொழிலாளர் ஜவுளி வியாபாரத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டு வந்தார். 

ஒரு கட்டத்தில் தன்னுடைய மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொண்டு சென்று சூர்யாவை சந்திக்க நினைத்தார்.

ஆனால் அப்பொழுது சூர்யா வெளிநாடு சென்று இருந்ததால் அவரை சந்திக்க முடியாமல் போனது.

அதன் பிறகு அவருக்கு சூரிய விடம் இருந்து ரூபாய் 5000 மட்டும் நன்கொடையாக தபாலில் வந்ததாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து வறுமையில் வாடிய நடிகை கற்பகம் மற்றும் அவரது கணவர் இருவரும் சேர்ந்து சுற்று கிராமங்களில் துணி விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தனர்.

சினிமா சங்கமம் தன்னை போன்ற நலிந்த நடிகர்கள் நடிகைகளுக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை என்று அவர் வருந்தி பேசி உள்ளார். 

ஏற்கனவே குள்ளமாக இருப்பதால் பலரின் கேலி கிண்டல்களுக்கு தான் ஆளாகி இருப்பதாகவும், சாதாரண மனிதர்கள் போல உயரமாக இருந்தால் மூட்டை தூக்கி கூட பேசிக் கொள்ளலாம் என்றும் தன்னுடைய ஏழ்மை நிலையை மனதுருக பேசியுள்ளார்.

பேரழகன் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சினேகா என்ற கேரக்டரில் நடித்த கற்பகத்திற்கு தற்பொழுது வரை பெரியதாக சினிமாவோ அல்லது வேறு நபர்களோ போதுமான உதவிகளை செய்யவில்லை என்று வருந்தி கூறியுள்ளார்.

எத்தனையோ விதங்களில் கோடி கணக்கில் பணங்களை செலவழித்து திரைப்படங்கள் எடுப்பதும், லாபங்களை அள்ளி குவிப்பதும், அதன் பிறகு தொடர்ச்சியாக முதன்மையான நடிகர் மட்டும் அதிக சம்பளம் கொடுத்து சினிமா தொழிலை வளர்த்து வருவதும் தற்பொழுது உள்ள நடைமுறை.

என்னதான் சினிமா நடிகர் நடிகைகள் சங்கம் இருந்தாலும் கூட, கடைநிலையில் உள்ள துணை நடிகர்களுக்கு போதுமான நிதி உதவி பொருளாதார உதவி செய்வதற்கு எவரும் இல்லை என்ற நிலையை நடிகை கற்பகத்தின் வாழ்க்கையை தெரிந்த பொழுது உணர முடிகிறது.