Labels

இதனால்தான் நடிகர் மாரிமுத்து இவ்வளவு பிரபலமடைந்தாரா...! வெளிவந்த தகவல்கள்!

 

marimuthu latest news

இயக்குனர் மற்றும் நடிகருமான மாரிமுத்து அவர்கள் சமீபத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உண்டாக்கி உள்ளது.

சினிமாவில் நடித்ததை விட, சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் உலகமெங்கும் உள்ள தமிழ் ரசிகர்கள் அனைவரையும் தனது நடிப்பு திருமேன் மூலம் கவர்ந்து இழுத்தார்.

எதிர்நீச்சல் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

marimuthu latest news

வெற்றிகரமாக அந்த தொடர் போய்க்கொண்டிருக்கும் பொழுது திடீரென, டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட மாரடைப்பானது, அவரை தன்னுடைய இறுதி காலத்திற்கு கொண்டு செல்லும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

அவருடைய மரண செய்தியானது அவரது குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலக தமிழ் ரசிகர்களுக்கும் தலையில் இடி விழுந்தது போன்ற ஒரு மோசமான உணர்வுகளை பிரதிபலித்து உள்ளது.

இந்நிலையில் அவரைப் பற்றிய வதந்திகள், புரளிகள் தொடர்ந்து போலியான ஊடகங்களின் மூலம் வெளிவந்து கொண்டுள்ளது.

நடிகர் மாரிமுத்து சினிமாவில் அதிகமாக பிரகாசிக்க முடியாமல் போய்விட்டதற்கு காரணம், தொடர்ச்சியாக அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காதது தான்.

அவர் ஒரு இயக்குனராக உருவாக வேண்டும் என்ற கனவுடன் தான் சினிமாவிற்கு வந்தார். தொடர்ந்து சில பல இயக்குனர்களுடன் உதவி இயக்குனராக சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது போதிய வருமானம் இல்லாமல் குடும்பமே வறுமையில் வாழ்ந்த போதும் கூட,  எவரிடமும் அவர் உதவி கேட்டு நின்றதில்லை.

காரணம் அவர் தன்மான சிங்கம். பகுத்தறிவாளர். என்ன உள்ளது அதை வைத்து சமாளிக்க கூடிய திறமை வாய்ந்த மனைவி, குடும்பத்தை பெற்றிருந்ததால் அவரால் அந்த சொற்ப வருமானத்தில் கூட குடும்பத்தை நடத்த முடிந்தது.

தொடர்ந்து உழைத்துக் கொண்டிருந்த அவருக்கு 40 வயதிற்கு மேல் தான் சினிமா வாய்ப்புகள் மற்றும் சின்னத்திரையில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

குறுகிய காலத்தில் மக்களிடையே மிக பிரபலமான நடிகராக மாறினார். தொடர்ந்து அவரை பேட்டி எடுத்த தண்ணீர் தொலைக்காட்சிகள் மற்றும் youtube சேனல்கள் அவரைப் பற்றிய நல்ல கருத்துக்களை மக்களிடையே பரவ வழிவகை செய்தது.

இன்னும் சொல்லப்போனால், அவர் நடித்த எதிர்நீதி சீரியலில் அவர் பேசி நடித்த வசனமானது என்றும் கூட ட்ரெண்டாகி வருகிறது.

இயல்பான நடிப்பு,, எதையும் பகுத்தறிந்து பேசும் அனுபவம் போன்றவற்றால் நடிகர் மாரிமுத்து அவர்கள் மிகப் பிரபலமான நடிகராக, ஒரு முக்கிய  பிரமுகராக மாறினார் என்பதுதான் உண்மை.

அவரது ஏற்கனவே நீரிழிவு நோய் பாதிப்பு இருந்ததால், தொடர்ந்து அவர் அதற்கான வைத்தியம் செய்து கொண்டு வந்தார். இந்நிலையில் தான் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அதன் பிறகு இது போன்ற துக்ககரமான நிகழ்வு நடந்துள்ளது.  வெள்ளந்தியான  மனதுடன் எதையும் பட்டவர் தனமாக பேசும் குணத்தால் அவர் இந்த அளவிற்கு பிரபலமடைந்தார் என்பதை உண்மை. 

அவரது இறப்பிற்கு வருத்தம் தெரிவித்து. அவர்தான் சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறது என்டர்டெயின்மென்ட்  ஒன்லி சினிமா இணையதளம்.