Labels

கடைசி நேரத்தில் சக நடிகருடன் மாரிமுத்து பகிர்ந்து கொண்ட அதிர்ச்சிகரமான விஷயம் இதுதான்..!

director marimuthu passes away

கடந்த சில தினங்களுக்கு முன்பு, டப்பிங் தியேட்டரில் மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் காலமானார் நடிகர் மாரிமுத்து.

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் நடித்து அனைத்து விதமான ரசிகர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர் நடிகர் மாரிமுத்து.

அவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. அவர் வந்து முகம் காட்சிகள் அனைத்தையும் ஒன்று விடாமல் பார்த்து விட்டு தான் மறு வேலை செய்பவர்களாக குடும்ப பெண்கள் மாறி போயிருந்தனர்.

அந்த அளவிற்கு அவரது நடிப்பும், கதாபாத்திரமும் பேசப்பட்டு வந்தது. அந்நிலையில் தான், அந்த சீரியலின் காட்சிகளுக்காக டப்பிங் பேச அன்று காலை 6 மணிக்கு வந்தவர், தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் டப்பிங் பேசிவிட்டு, வெளியில் வந்த பொழுது முகம் வேர்த்து போனதாக சக நடிகர் கமலேஷ் தெரிவித்து இருந்தார்.

எப்பொழுதும் டப்பிங் பேசுமாறு ஏசியை நிறுத்தி வைத்திருப்பதால், ஒரு சிலருக்கு வேர்த்து போகும். அதுபோல இவருக்கும் வேர்த்துள்ளது என்று நினைத்துக் கொண்டு, தனக்கான காட்சிகளுக்கு டப்பிங் பேச உள்ளே சென்றுவிட்டதாக தெரிவித்தார்.

நடிகர் மாரிமுத்து டப்பிங் அறையை விட்டு வெளியே வந்து ஐந்து நிமிடங்கள் ஆன பிறகும் கூட, உள்ளே திரும்பாததால், , அவர் எங்கே இருக்கிறார் என்று சென்று பார்த்தபோது அவரையும் அவருடைய காரையும்  காணவில்லை.

அவருக்கு போன் செய்தாலும் அவர் எடுக்கவில்லை. சிறிது நேரத்தில் அவருடைய மகனிடம் இருந்து போன் வந்தது. அப்பா நம்மை அனைவரையும் விட்டு சென்று விட்டார் என்று அவர் சொல்லி கதறினார்.

மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது தான், அவருக்கு மாரடைப்பு வந்திருந்தது தெரிந்தது.

மருத்துவ சொன்னது என்னவென்றால், அந்த நிலையில் அவர் கார் ஓட்டி வந்திருக்காமல் வேறு யாரேனும் கார் ஓட்டி வந்திருந்தால், அவரைக் காப்பாற்று இருக்கலாம் என்று கூறினார்.

கூடவே இருந்து, அந்த நிமிஷம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு மனிதர், திடீரென உயிரிழந்த அந்த நிகழ்வு தம்மை இன்னும் பாதித்து இருப்பதாகவும், தன்னுடன் இருக்கும் பொழுது, அவரைப் பற்றிய தகவல்கள் மீம்ஸ்கள், ரசிகர்கள் அவரை எப்படி கொண்டாடுகிறார்கள் என்று பேசி சிரித்துக் கொண்டிருப்பார் என்று கூறியுள்ளார்.

புகழின் உச்சத்தில் இருக்கும் பொழுது திடீரென ஒரு மனிதர் இதுபோல ஆவது தமக்கு வேதனை அளிப்பதாக எதிர்நீச்சல் நடிகர் கமலேஷ் தெரிவித்தார்.